பெரம்பலூர் கல்லூரியில் இணையத் தமிழ்த் தேசியக் கருத்தரங்கம்
பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் கணினி, இணையத் தமிழ் தேசியக் கருத்தரங்கம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இரு நாட்கள் நடைபெறுகிறது.
முதல்நாள் முனைவர் ம.நல்லு அவர்கள் தலைமயில் நடைபெறும் தொடக்க விழாவில் முனைவர் முகிலை இராச பாண்டியன் அவர்கள் முன்னிலையுரையாற்றவும் முனைவர் கோபிநாத் கணபதி அவர்கள் ஆய்வுத் தொகுப்பை வெளியிட்டுச் சிறப்புரையாற்றவும் உள்ளனர்.
புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி முனைவர் மு.இளங்கோவன் கருத்துரை வழங்குவதுடன் பிற்பகல் அமர்வில் தமிழ்த் தட்டச்சு, தமிழ் இணையத்தள வளர்ச்சி, தமிழ் மின் இதழ்கள் பற்றி காட்சி விளக்கத்துடன் சிறப்புரை வழங்கவுள்ளார்.
சனி்க்கிழமை பிற்பகல் நடைபெறும் நிறைவு விழாவில் முனைவர் தி.நெடுஞ்செழியன், முனைவர் டேவிட் பிரபாகர், முனைவர் மா.கணேசன் உரையாற்ற உள்ளனர். கலந்துகொள்ள விரும்புவோர் பேராசிரியர் சானகிராமன் (தமிழ்த்துறைத் தலைவர்) அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
செல்பேசி எண் : 9842523869












Click it and Unblock the Notifications