மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்- விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

Meenakshi Amman Temple
மதுரை: புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா ஏப்ரல் 8ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின.

கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் திருப்பணிகள் ரூ.12 கோடி செலவில் கடந்த 3 மாதங்களாக சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன்,கோவில் நிர்வாக அதிகாரி ராஜநாயகம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

அம்மன் கோபுரத்தில் தங்கத்தகடு பதிக்கும் பணி, வெளிப்புற சுவர்களுக்கு மாணிக்க பட்டை தீட்டுவது, பழங்கால ஓவியங்களுக்கு அதன் பழமை மாறாமல் தற்போது வர்ணம் பூசுவது ஆகிய பணிகள் முடிந்த நிலையில் தற்போது கோவில் புது பொலிவுடன் ஜொலித்து வருகிறது.

அனைத்து கோபுரங்களிலும் வேலை முடிவடைந்து விட்டதால் கோவில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இதை தொடர்ந்து அம்மன் மற்றும் சுவாமி சன்னதி அமைந்துள்ள பகுதிகளில் ரூ. 60 லட்சம் மதிப்பில் குளு குளு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. விக்னேஸ்வர பூஜை என்பது தடைகளை தகர்க்க வேண்டி முழு முதல் கடவுளான விநாயகருக்கு செய்யப்படுவதாகும்.

காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடந்தது. நாளை காலை 8 மணிக்கு கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது. நாளை மறு நாள் நவக்கிரக ஹோமம் நடைபெறுகிறது.

29ம் தேதி தனபூஜை, 30ம் தேதி சாந்தி ஹோமம், 31ம் தேதி மூர்த்தி ஹோமம் என வரிசையாக ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.

கும்பாபிஷேகத்துக்கு சரியாக ஒரு வாரம் முன்பு வரும் ஏப்ரல் 2ம் தேதி காலை யாக சாலை பூஜைகள் தொடங்குகின்றன. இதற்காக வடக்காடி வீதியில் யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

யாகசாலை பூஜைக்குரிய பொருட்களை வழங்க விரும்பும் பக்தர்கள் இதற்காக அம்மன் சன்னதி முன்பு கோவில் நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டுள்ள தனி கவுண்டரில் பூஜைக்குரிய பொருட்களை கொடுத்து ரசீதை பெற்று கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

இதை தொடர்ந்து ஏப்ரல் 6ம் தேதி பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் ஏப்ரல் 8ம் தேதி காலை 9.15 மணிக்கு ராஜ கோபுரங்களுக்கும், 9.30 மணிக்கு மீனாட்சி அம்மன் கோபுரத்திற்கும், 9.45 மணிக்கு சுவாமி கோபுரத்திற்கும் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி புதுப் பொலிவு பெற்றுள்ள மீனாட்சி அம்மன் கோவிலின் அனைத்து கோபுரங்கள் பிரகாசமாக காணப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+