For Daily Alerts
Just In
துபாய் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் தேர்தல்
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் பொருட்டு 3ம் தேதி இரவு 7 மணிக்கு துபாய் அல் கிஸஸ் பகுதியில் உள்ளநி ராயல் பேலஸ் ஹோட்டலில் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இத்தேர்தலுக்கு இந்திய சமூக நல அமைப்பின் கன்வீனர் கே.குமார் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை துபாய் தமிழ்ச் சங்க நிறுவன புரவலரும், விழாக்குழு செயலாளருமான ஏ. முஹம்மது தாஹா தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலில் துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் அனைவரும் பங்கு பெற்று வாக்களிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரம் பெற:
தொலைபேசி எண் - 050 467 43 99
மின்னஞ்சல் - [email protected]
Comments
Story first published: Thursday, April 2, 2009, 16:07 [IST]