2 அடி உயர மாப்பிள்ளையை மணந்த 5 அடி உயர பெண்!

Subscribe to Oneindia Tamil

2 ft hight Youth marries 5 ft woman in Kerala
கோழிக்கோடு: 2 அடி உயரே ஆன 35 வயது இளைஞர், 5 அடி உயரம் கொண்ட பெண்ணை மணந்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடை சேர்ந்தவர் தேவதாஸ். இவர் ஒரு ஓவியர். 35 வயதாகிறது. இவர் வழக்கமான ஆண்களின் உயரம் கொண்டவரல்ல, 2 அடி உயரமே கொண்டவர்.

இந்த இயற்கையின் முரண் காரணமாக திருமணமே நடைபெறாமல் தவித்து வந்தார் தேவதாஸ். இந்த நிலையில், சமீபத்தில் 30 வயதான சசிகலா என்ற பெண்ணை சந்தித்தார். இவர் பெண்களின் சராசரி உயரமான 5 அடி உயரம் கொண்டவர்.

உயரத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும், இருவரது மனமும் சமன்பட்டது, காதல் மலர்ந்தது, இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

தேவதாஸின் குடும்பத்தினர் இந்த காதலுக்கு பச்சைக் கொடி காட்டினர். ஆனால் சசிகலாவின் பெற்றோருக்கு துளியும் இதில் விருப்பம் இல்லை.

இருந்தாலும் தங்களது காதலில் உறுதியாக இருந்த தேவதாஸும், சசிகலாவும் கோழிக்கோடு மாவட்டம் பரப்புரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் வைத்து நேற்று திருமணம் செய்து கொண்டனர். தேவதாஸின் குடும்பத்தினர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த வித்தியாசமான காதல் ஜோடியின் உன்னதமான காதலைப் பார்த்து கோவிலுக்கு வந்தவர்கள் அவர்களை வாழ்த்திச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+