விழுப்புரத்தில் வரும் 5ம் தேதி மிஸ் கூவாகம் அழகி போட்டி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரத்தில் வரும் 5ம் தேதி மிஸ் கூவாகம் அழகி போட்டி நடைபெறும் என மாவட்ட அரவாணிகள் நல சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் நலச் சங்க தலைவர் ராதாம்மாள் கூறுகையில்,

விழுப்புரம் ஆஞ்சநேய திருமண மண்டபத்தில் வரும் 5ம் தேதி மிஸ் கூவாகம் 2009 என்ற அழகி போட்டி ஐந்தாவது முறையாக நடைபெறுகின்றது.

அரவாணிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்தில் தான் முதன் முறையாக ரேஷன்கார்டு, பட்டா போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்ற மாவட்டங்களிலும் அரவாணிகளுக்கு சலுகைகள் கிடைத்து வருகிறது.

அரவாணிகள் பாலியல் தொழிலுக்கு செல்லாமல் இருக்க அரசு துறைகளில் கல்வி தகுதிக்கேற்ப வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும்.

நலவாரியம் அமைத்து கொடுத்த முதல்வர் கருணாநிதி குடியிருப்பு, அடையாள அட்டை, வேலை வாய்ப்புகளையும் வழங்க வேண்டும். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி அரவாணியாக மாற்றவில்லை. மாறுபவர் முழு சம்மதத்துடன் தான் அரவாணியாக மாற்றப்படுகிறார்.

பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற புகார்கள் எங்கள் மீது கூறப்படுகின்றது. முறையான வேலை வாய்ப்புகள் இருந்தால் யாரும் இது போன்றசெயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

வட மாநிலங்களில் எங்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். சுப காரியங்களுக்கு அழைக்கிறார்கள். தமிழகத்தில் தான் எங்களை ஏற்க மறுக்கிறார்கள். நாங்கள் கால் வைத்தால் அந்த இடம் செழிக்கும் என்றார்.

இந்த அழகிப் போட்டிக்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்படதக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+