வானலை வளர் தமிழ் அமைப்பின் சிறப்பிதழ் - இருளும் ஒளியும்
துபாய்: துபாய், வானலை வளர் தமிழ் அமைப்பின் கவிதை நிகழ்வு நிகழ்ச்சியின்போது இருளும் ஒளியும் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது.
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்பட்டு வரும் கவிதை நிகழ்வு 12.06.2009 வெள்ளிக்கிழமை காலை கராமா சிவ்ஸ்டார் பவன் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த்தேர் எனும் கவிதை இதழ் இருளும் ஒளியும் என்ற சிறப்பிதழாக வெளியிடப்பட்டது. மேலும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற எம். அப்துல் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்து கவிதை வாசித்தார் தமிழ்த்தேர் பொறுப்பாசிரியர் ஜியாவுத்தீன்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திருக்குறள் பெருமாள், எஸ்.டி.கார்கோ சிராஜுத்தீன், இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் குத்புதின் ஐபக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இருளும் ஒளியும் எனும் தலைப்பில் அமீரகக் கவிஞர்கள் கவிதை வாசித்தனர்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் வானலை வளர்தமிழ் அமைப்பிற்கு தெரிவித்த வாழ்த்தினை அமீரக காயிதேமில்லத் பேரவையின் ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் வாசித்தார்.
நிகழ்வில் கலையன்பன் உள்ளிட்ட பலர் பேசினர்.
நிகழ்வினை துரைமலைவேல் தொகுத்து வழங்கினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர், சிம்மபாரதி, முகவை முகில் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.