For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் - ஜூலை 1,2ல் சிறப்பு ரயில்

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் ஜூலை 1 மற்றும் ஜூலை 2ம் தேதிகளில் நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் சுப்பிரமணியாசாமி கோயிலில் வரும் ஜூலை 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதனை முன்னிட்டு திருச்செந்தூர்-நெல்லை இடையே 1 மற்றும் 2ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

நெல்லை திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் காலை 9.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு காலை 11.45க்கு திருச்செந்தூர் சென்றடையும்.

திருச்செந்தூர் -நெல்லை சிறப்பு ரயில் திருச்செந்தூரில் இருந்து மாலை 4.15க்கு புறப்பட்டு நெல்லை மாலை 5..55 மணிக்கு வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் நெல்லை-திருச்செந்தூர் இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X