திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் - ஜூலை 1,2ல் சிறப்பு ரயில்
நெல்லை: திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் ஜூலை 1 மற்றும் ஜூலை 2ம் தேதிகளில் நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் சுப்பிரமணியாசாமி கோயிலில் வரும் ஜூலை 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதனை முன்னிட்டு திருச்செந்தூர்-நெல்லை இடையே 1 மற்றும் 2ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
நெல்லை திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் காலை 9.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு காலை 11.45க்கு திருச்செந்தூர் சென்றடையும்.
திருச்செந்தூர் -நெல்லை சிறப்பு ரயில் திருச்செந்தூரில் இருந்து மாலை 4.15க்கு புறப்பட்டு நெல்லை மாலை 5..55 மணிக்கு வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் நெல்லை-திருச்செந்தூர் இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.