நாட்டின் கடனை அடைக்க கூலித் தொழிலாளி கொடுத்த ரூ. 5000!

ராமநாதபுரம் மாவட்டம் பொந்தம்புளி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (31). கூலித் தொழிலாளியான இவருக்கு மாலதி என்ற மனைவியும், 2 மகன், ஒரு பெண் குழந்தைகளும் உள்ளன.
குடும்பத்துடன் தற்போது திருச்சியில் வசித்து வருகிறார் முத்துராமலிங்கம். அங்குள்ள பிரபலமான காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் கூலித் தொழிலாளியாக பிழைப்பு நடத்தி வருகிறார் முத்துராமலிங்கம்.
கஷ்ட ஜீவனம், குடும்பச் சுமை, நிதி நெருக்கடி என வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனைவருக்குமே உள்ள சிரமங்கள் முத்துராமலிங்கத்துக்கும் உள்ளது. ஆனால் அதையும் தாண்டிய தேசப் பற்றையும், தேசியக் கடமையுணர்வையும் வெளிப்படுத்தி உயர்ந்து நிற்கிறார் முத்துராமலிங்கம், அனைவரையும் வியப்புக் கடலில் தள்ளியுள்ளார்.
அப்படி என்ன செய்து விட்டார் முத்துராமலிங்கம்? அத்தனை இந்தியர்களும் செய்ய வேண்டியதை ஞாபகப்படுத்தியதுதான் முத்துராமலிங்கம் செய்த அந்த காரியம்.
கடந்த மே 8ம் தேதி 'இந்தியாவின் கடனை அடைக்க" என்று குறிப்பிட்டு ரூ.5,000க்கு டி.டி. எடுத்து,
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பினார். பிரதமர் அலுவலகம் அந்த நிதியைப் பெற்று பிரதமர் நிவாரண நிதியில் சேர்த்துள்ளது. அத்தோடு நில்லாமல், மறக்காமல் முத்துராமலிங்கத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் அலுவலகம் ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ளது.
எனக்கு ஒரு நாளைக்கு ரூ. 100 முதல் 150 வரை ஊதியமாக கிடைக்கும். அந்தப் பணத்தை சேர்த்து வைத்துத்தான் நான் பிரதமருக்கு 5000 ரூபாயை அனுப்பினேன்.
நம் நாடு வெளிநாடுகளில் வாங்கியிருக்கும் கடனால், ஒவ்வொரு இந்தியனுக்கும் ரூ.30,000ம் கடன் உள்ளது என்று பத்திரிகையில் படித்தேன். எனவே, சேமித்த பணத்தை, கடனை அடைக்க என்று எழுதி பிரதமருக்கு அனுப்பினேன் என்கிறார் தான் செய்த மகத்தான காரியத்தின் மகத்துவம் முழுமையாகப் புரியாமல்.
உண்மையில், இவருக்குத்தான் பாரத ரத்னா கொடுக்க வேண்டும்..!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications