ஏழை மாணவர்களுக்கு இலவசப் புத்தகம் வழங்கும் ஜெயின் டிரஸ்ட்
சென்னை: பொறியியல் மற்றும் கம்ய்பூட்டர் சயின்ஸ் படிக்கும் ஏழை மாணவ, மாணவியருக்கு இலவச புத்தகங்களை வழங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என சென்னையைச் சேர்ந்த ஸ்ரீசுமதி விஷால் ஜெயின் கல்வி அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தி.நகரில் உள்ள ஸ்ரீ சுமதி விஷால் ஜெயின் கல்வி அறக்கட்டளையின் புத்தக வங்கியில் இருந்து பொறியியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை "திருகுமரன் அபார்ட்மென்ட்ஸ்', புதிய எண். 12, ராமேஸ்வரன் ரோடு, தரை தளம், (ரங்கநாதன் தெரு அருகில்), தி.நகர், சென்னை 17 என்ற முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 25.7.2009. புத்தக வங்கி அனைத்து வார நாட்களிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் திறந்திருக்கும்.
புத்தக வங்கிக்கு பொறியியல் பாடப்புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க விரும்பும் மாணவர்களும் மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
புத்தக வங்கியில் இருந்து புத்தகங்கள் பெறுவதற்கு மேலும் தகவல் அறிய விரும்புவோர் தொலைபேசி எண். 2436 0675 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.