நெல்லையில் அரசு பொருட்காட்சி இன்று தொடக்கம்
நெல்லை: நெல்லை மாநகராட்சி திடலில் அரசு பொருட்காட்சி இன்று தொடங்குகிறது.
நெல்லை மாநகராட்சி பொருட்காட்சி திடலில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகள் சார்பில் 20 ஸ்டால்கள் பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. 52 தனியார் ஸ்டால்கள், விற்பனை கடைகள் இடம் பெற்றுள்ளன.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் அம்சங்கள் பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. துவக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.
சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகிக்கிறார். கலெக்டர் ஜெயராமன் வரவேற்கிறார். செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் காமராஜ் விளக்கவுரை ஆற்றுகிறார். செய்திதுறை அமைச்சர் பரிதி இளம்வழுதி பொருட்காட்சியை திறந்து வைக்கிறார்.
விளையாட்டுதுறை அமைச்சர் டிபிஎம் மைதீன்கான், தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் பூங்கோதை, மேயர் ஏஎல்சுப்பிரமணியன் உள்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications