ஜாம்பியா அதிபர் மீது 'உச்சா' போன குரங்கு!

ஜாம்பியா தலைநகர் லுசாகாவில், அதிபர் ரூபியா பான்டா, மரத்தடிக்குக் கீழே செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மரத்தின் மீது ஏராளமான குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன.
அந்த சமயத்தில் ஒரு குரங்கு அதிபர் மீது சிறுநீர் கழித்து விட்டது. இதனால் அதிபரின் சட்டை நனைந்து விட்டது.
இதைப் பார்த்த அதிபர் பான்டா, குரங்கைப் பார்த்து, என் சட்டையை நனைத்து விட்டாயே என்று சிரித்தபடி கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைப் பார்த்து, இதெல்லாம் நமக்குக் கிடைக்கும் ஆசிர்வாதம் என்றார். இதைக் கேட்டதும் செய்தியாளர்களும் சிரித்தனர்.
அதிபர் பான்டாவின் மாளிகை அமைந்துள்ள பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. அவை அதிபர் அலுவலகத்திற்குள்ளும், அருகில் உள்ள வீட்டுப் பகுதியிலும் படு சகஜமாக விளையாடும்.
இதுதவிர ஏராளமான மான்கள், அரிய வகை பறவைகளும் அதிபர் மாளிகை வளாகத்தி்ல நிறையக் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications