சபரிமலை சீசனுக்கு தனி பட்ஜெட் - தேவஸ்தானம் முடிவு
திருவனந்தபுரம்: சபரிமலையில், இந்த ஆண்டு ஐயப்பன் கோவில் மண்டல மகர விளக்கு விழாவுக்கு தனி பட்ஜெட் போடப்படும் என திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐய்யப்பன் கோவில் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல மகரவிளக்கு விழா பிரசித்தி பெற்றது. நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி ஐயப்பனைத் தரிசிக்க வருவார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டு விழாவுக்கு தனி பட்ஜெட் போட தேவஸ்வம் போர்டு தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து போர்டு தலைமை ஆணையர் ஜெயக்குமார் கூறுகையில், மண்டல மகர விளக்கு சீசனுக்காக தனி பட்ஜெட் போடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதன் மூலம் திருவிழாவுக்கான செலவுகள் கட்டுப்படுத்தப்படும், முறையாக கண்காணிக்கப்பட்டு செலவழிக்கப்படும்.
மேலும் திருவிழா முடிந்தவுடன் வரவு, செலவுக் கணக்கு அறிக்கையும் வெளியிடப்படும்.
இந்த பட்ஜெட்டைத் தயாரிப்பதற்காக தேவஸ்வம் போர்டு கணக்கு அதிகாரி, நிதி அதிகாரி, சபரிமலை செயல் அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications