ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ராமேசுவரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாம் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதையடுத்து பக்தர்கள் கூட்டம் குவியத் துவங்கியுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் இந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்துக்களின் புண்ணிய தலங்களில் ஒன்று என்பதால் இங்கு பல மாநில பக்தர்கள் வந்து தீர்த்தமாடி செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை சுமார் 9.50 மணிக்கு நடைபெறுகிறது. பிள்ளையார்பட்டி சர்வசதாகம் பிச்சை குருக்கள் தலைமையில் 28 வேத விற்பன்னர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.
முன்னதாக கோவில் திருப்பணிகள் அனைத்தும் முடிந்தநிலையில் கடந்த 28ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன. இன்று காலை 8.40 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை நடந்தது. ஐந்தாம் கால பூஜை மாலை 5.30 மணிக்கும், ஆறாம் கால பூஜை நாளை காலையும் நடக்க இருக்கின்றன.
கடைசியாக இங்கு கடந்த 2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்த கும்பாபிஷேகம் 2013ல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் உள்ள யாழி நான்கு ஆண்டுகளுக்கு முன் கீழே விழுந்து சேதமானது.
இதையடுத்து அவை ரூ. 23 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, தற்போது கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
மதுரையிலிருந்து சிறப்பு ரயில்...
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. இது நாளை காலை 5.30 மணிக்கு கிளம்பி 8.45 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications