வாசனிடம் மனு கொடுக்க வந்த பெண்- மேடையிலிருந்து தள்ளிய காங்கிரசார்
செங்கோட்டையில் பெருந்தலைவர் காமராஜரின் 107வது பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா எஸ்.எம்.எஸ். அரசு ஆண்கள் பள்ளி சார்பில் நடைபெற்றது.
விழாவில் மத்திய கப்பல் துறை அமைச்சர் வாசன், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சுதர்சனம், நெல்லை எம்பி ராமசுப்பு, தென்காசி எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன், கடையநல்லூர் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ், மாவட்ட ஆட்சியர், கல்வி துறை, வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானோரில் பலர் அமைச்சர்கள், அதிகாரிகளிடம் மனு கொடுக்க முயன்றனர். ஆனால் கட்சி பிரமுகர்கள் சிலரிடம் மட்டுமே மனுக்களை வாங்கி சம்பந்தப்பட்டவர்களிடம் ஓப்படைத்தனர்.
செங்கோட்டை வல்லம் ரோட்டை சேர்ந்த குட்டி என்பவரது மனைவி செல்லம்மாள் (59). இவருக்கு குழந்தைகள் கிடையாது. உறவினர்களும் ஆதரவின்றி உள்ளதாலும், வயதான, வறுமையான சூழ்நிலையை கருத்தில் கொண்டு கடந்த 5 ஆண்டுகளாக முதியோர் உதவித் தொகை கேட்டு மனுமேல் மனு செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்தார்.
இந்நிலையில் விழாவுக்கு வந்த வாசனிடம் மனு கொடுக்க மேடை ஏறினார். அப்போது கட்சி பிரமுகர்கள் மேடையில் மனு கொடுக்க விடாமல் தடுத்து பெண்ணென்றும் பாராமல் மேடையில் இருந்து செல்லம்மாளை பிடித்து கீழே தள்ளினர்.













Click it and Unblock the Notifications