ரத்தின சபாபதிக்கு அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை பரிசு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராஜா சர் முத்தையா செட்டியாரின் 106வது பிறந்த நாளையொட்டி ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில் தமிழறிஞர் ரத்தின சபாபதிக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.
வரும் ஆகஸ்ட் 5ம் தேதி சென்னை ராணி சீதை மன்றத்தி்ல் நடக்கும் விழாவில் இந்தப் பரிசு வழங்கப்படும் என்று அறக்கட்டளையின் செயலாளர் ஆறு.ராமசாமி தெரிவித்தார்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அடங்கிய குழு இந்த விருதுக்கு ரத்தின சபாபதியை தேர்வு செய்தது.
இந் நிகழ்ச்சியில் குஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோபாலகிருஷ்ணன், அண்ணாமலை பல்கலைக்கழக இணை வேந்தர் இராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications