வல்லநாட்டில் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி
தூத்துக்குடி: வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் போலீசாருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் ஆண்டுதோறும் போலீசாருக்கான மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு தமிழக போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டிகள் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் தொடங்கியது. இதில் தமிழக காவல்துறையை சேர்ந்த முக்கிய அணிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
தெற்கு, வடக்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டல காவல் துறை அணிகள், ஆயுதப்படை பிரிவினர், கமாண்டோ படை பிரிவினர், தலைமையிடத்து அணியினர் உள்ளிட்ட 8 அணிகளை சேர்ந்த 200 பெண்கள் உள்பட 450 பேர் கலந்து கொண்டனர்.
இதனை சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஐஜி தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். சிறப்பு அதிரடிப்படை ஐஜி சைலேந்திரபாபு, நெல்லை மாநகர கமிஷனர் குணசீலன், தூத்துக்குடி எஸ்பி செந்தில் குமார், அணி கமாண்டென்டுகள் குணசேகரன், பால்ராஜ், சேகர், உசேன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகள் நாளை வரை நடக்கின்றன.
இப்போட்டியில் ரைபிள், பிஸ்டல், ரிவல்வார், பிக்போர், கார்பைன், சென்டர் பயர் உள்ளிட்ட பிரிவுகளில் நடக்கிறது.












Click it and Unblock the Notifications