Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாரதியை தேசியக் கவியாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- இல.கணேசன்

Subscribe to Oneindia Tamil

Bharathiar
சென்னை: மகாகவி பாரதியாரை தேசியக் கவியாக மத்திய அரசு அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் இல.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழர்களின் மகாகவி சுப்பிரமணிய பாரதி. இவரது சிந்தனையும், எழுத்தும் நாடு தழுவியது. சுதந்திரத்துக்கான அவரது போராட்டம் கவிதையோடு நின்றுவிடவில்லை. அவரது புகழ்பாடும் கடமை நாட்டு மக்களுக்கு உண்டு. தேசிய கீதம், தேசிய சின்னம், தேசிய கொடி, தேசிய பறவை என்றெல்லாம் இருக்கும் போது தேசிய கவி மட்டும் இல்லை.

இந்த விஷயத்தில் தமிழக அரசு முனைப்பு காட்டி, பாரதியாரை தேசிய கவி என அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்ப வேண்டும்.

சென்னையில் பாரதி இல்லம் சேதமடைந்து உள்ளது. சீரமைப்பு பணிகள் எப்போது முடியும்? இதற்கு பிறகு கூட்டங்கள் நடத்த அனுமதி தரப்படுமா? அங்கு அரசு அலுவலகங்கள் குடியேறுவதாக பேசப்படுகிறது.

இவற்றை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். அக்டோபர் 11ம் தேதிக்குள் பாரதி இல்லம் செயல்பாட்டுக்கு வராவிட்டால் பாரதி பக்தர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இன்று மகாகவி பாரதியாரின் நினைவு நாள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+