For Daily Alerts
Just In
எஸ்.சி-எஸ்.டி. நல நிதி-3வது இடத்தில் தமிழகம்
ராய்பூர்: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலனுக்காக அதிகமாக செலவிடும் முதல் 5 மாநிலங்களில் தமிழகமும் இடம் பிடித்துள்ளது.
இதில் சத்தீஸ்கர் மாநிலம் தான நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இங்கு முதல்வர் ரமண்சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதில் இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரம், மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு, நான்காவது இடத்தில் ஆந்திரப் பிரதேசம், ஐந்தாவது இடத்தில் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளதாக மத்திய அரசின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
2008-09ம் நிதியாண்டில் தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 78 சதவீதமும், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 83 சதவீதமும் சத்தீஸ்கர் மாநில அரசு முறையாக செலவிட்டுள்ளது.
Comments
தமிழ்நாடு tamil nadu நலன் நிதி caste dalit welfare schemes funds தலித் தாழ்த்தப்பட்டோர் states population tribals பழங்குடியினர்
Story first published: Sunday, September 13, 2009, 12:06 [IST]