For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரவிந்தர் புதுச்சேரி வந்தது ஏன்?

By Staff
Google Oneindia Tamil News

Sri Aurobindo
புதுச்சேரி: மகான் ஸ்ரீ அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்து 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அரவிந்தரின் 100வது பிறந்த தினத்தையொட்டி 1972ம் ஆண்டிலும் தபால் தலை வெளியிடப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அரவிந்தர் 1910ம் ஆண்டு தனது கர்மயோகி பத்திரிக்கையில் எழுதிய ஒரு கட்டுரையையடுத்து அவரை மகா ஆபத்தான மனிதர் என்று அறிவித்தது அப்போது இந்தியாவை ஆண்ட பிரிட்டஷ் அரசு.

அவரைக் கைது செய்யவும் முயன்றது. இதையடுத்து அந்த ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரிக்கு இடம் மாறினார் அரவிந்தர்.

அவரை மகாகவி பாரதியார் தலைமையிலான தமிழர்கள் வரவேற்று சங்கர செட்டியார் என்ற பெரும் சீமானின் வீட்டில் தங்க வைத்தனர். இதையடுத்து தனது அரசியல் நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு முழு ஆன்மீகத்தில் நுழைந்துவிட்டார் அரவிந்தர்.

அவர் புதுச்சேரி வந்து 2010 ஏப்ரல் 4ம் தேதியுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி அரவிந்தர் ஆசிரமம் சார்பில் பிரமாண்ட விழா நடக்கிறது.

இந் நிலையில் மத்திய திட்டத்துறை இணையமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

மகான் அரவிந்தர் புதுச்சேரி வந்து 2010 ஏப்ரல் 4ம் தேதியுடன் 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி அரவிந்தர் ஆசிரமம் சார்பில் பிரமாண்ட விழா நடக்கிறது.

இந்த தினத்தை நினைவுகூறும் வகையில் தபால் தலை வெளியிட வேண்டும் என்று அரவிந்தர் ஆசிரம நிர்வாகத்தினர் கோரியுள்ளனர்.

இது குறித்து மத்திய தகவல் மற்றும் தபால்துறை அமைச்சர் ராசாவிடம் நானும், அரவிந்தர் ஆசிரம நிர்வாகி புருஷோத்தமனும் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

வரும் 4.4.2010ல் அரவிந்தரின் சிறப்புத் தபால் தலை வெளிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராசா தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X