தமிழக அரசின் அண்ணா பதக்கம் - விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்
சென்னை வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வீர, தீரச் செயல்களுக்கான “அண்ண பதக்கம்" ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது.
ரூ. 10 ஆயிரத்திற்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியரை ஆகியவை இதில் அடங்கும். வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுள்ளவர்கள்.
பொது மக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.
2010 - ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள பதக்கத்திற்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள், வீர, தீரச் செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் தொடர்புடைய மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக, செயலாளர், பொதுத் துறை தலைமைச் செயலகம், சென்னை- 600009 என்ற முகவரிக்கு 30. 11. 09 க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு முதலமைச்சர் அவர்களால் 26. 1. 2010 குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.