கன்னியாகுமரியில் சன்னியாசிகள் பேரணி
கன்னியாகுமரி: சன்னியாசிகள் பேரணி கன்னியாகுமரியில் நடத்தப்பட உள்ளது என தமிழ்நாடு சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சிவசேனா மாநில செயலாளர் சிவாஜி கூறியுள்ளதாவது: இந்து மதம் அனைவரையும் மதித்து அன்பு செலுத்தும் கொள்கை உடையது. அனைவரையும் அரவணைத்து வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்தும் கோட்பாடு உடையது.
முதலில் இந்தியன் என்று கூறிக்கொள்ளவே அனைவரும் முன் வரவேண்டும். இந்திய சட்டத் திட்டங்களுக்கும், இறையாண்மைக்கும் மதிப்பளித்து குமரி முதல் இமயம் வரை இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை தவறான வழிக்கு இட்டுச்செல்லும் எந்த அரசியல் அமைப்பும் தேச தூரோகம் செய்ததற்கு சமமாகும். தமிழகத்தை பொறுத்தவரை சன்னியாசிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு ஹரித்துவர், ரிஷிகேஷ் சென்று அங்குள்ள சன்னியாசிகளை நேரில் சந்தித்து அவர்களை தமிழ்நாட்டுக்கு வர அழைப்பு விடுத்துள்ளோம். வரும் ஏப்ரல் மாதம் பெரிய பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். கன்னியாகுமரியில் இருந்து பேரணியை துவங்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications