For Daily Alerts
Just In
ஹரியானாவில் அதிசயம் - ஒரே நாளில் 31.32 லிட்டர் பால் கறந்த எருமை
சண்டிகர்: ஹரியானாவின் பரீதாபாத் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில், எருமை மாடு ஒன்று ஒரே நாளில் 31.32 லிட்டர் பால் கறந்து அசத்தியுள்ளது. இது ஹரியானா மாநில மாடுகள் நிகழ்த்தியுள்ள அதிக பட்ச கறவையி்ல் ஒரு சாதனையாம்.
இதுகுறித்து ஹரியானா மாநில கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதுவரை ஹரியானா மாநிலத்தில் ஒரே நாளில் அதிக அளவிலான பால் கறந்துள்ளது இந்த மாடு மட்டும்தான்.
இது முர்ரா வகை எருமை மாடாகும். தரம் பால் நகரைச் சேர்ந்தது. இந்த மாட்டின் சாதனை பால் கறப்பு நிகழ்ச்சி, உதவி கோட்ட மாஜிஸ்திரேட், பால்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது என்றார்.
Comments
Story first published: Tuesday, December 1, 2009, 14:18 [IST]