திருச்சூர் வி.ராமச்சந்திரன், பேராசிரியர் சைலஜாவுக்கு ஸ்ரீவித்ய தபஸ்வி விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை: தபஸ் அகடமியின் 2009ம் ஆண்டுக்கான 'ஸ்ரீவித்ய தபஸ்வி' விருதுக்கு, கர்நாடக இசைக் கலைஞர் திருச்சூர் வி.ராமச்சந்திரன், பரதநாட்டிய கலைஞர் பேராசிரியர் சைலஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் டிசம்பர் 8ம் தேதி நடைபெறுகிறது. முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், 'சரிகமபதநி' ஆசிரியர் நாராயண விஸ்வநாத் ஆகியோர் விருதுகளை வழங்குகின்றனர்.
பக்தியை மையமாகக் கொண்ட பாரம்பரிய இசை மற்றும் நாட்டியத்துக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அகடமியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications