For Daily Alerts
Just In
மகளிர் தினத்தையொட்டி பெண் கைதிகளுக்கு இன்று பிரியாணி
சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழக சிறைகளி்ல் இன்று பெண் கைதிகளுக்கு பிரியாணி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சிறைத்துறை டி.ஜி.பி. ஆர்.நடராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மகளிர் தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமையன்று தமிழகம் முழுவதும் உள்ள 3 பெண்கள் மத்திய சிறையிலும், 11 பெண்கள் சப்-ஜெயில்களிலும் சுமார் ஆயிரம் பெண் கைதிகளுக்கு பிரியாணி விருந்து மற்றும் இனிப்பு வழங்கப்படுகிறது.
சென்னை புழல் பெண்கள் ஜெயிலில் பெண் கைதிகளுக்கு இலவச மருத்துவ முகாமும் நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார் என்றார் நடராஜ்.
தமிழ்நாடு சிறை விருந்து இனிப்பு tamilnadu prison sweets womens day feast மகளிர் தினம் பிரியாணி biriyani
Story first published: Sunday, March 8, 2009, 11:53 [IST]