Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்கள் உண்ணாவிரதம் 13வது நாளாக நீடிப்பு

Subscribe to Oneindia Tamil

Fasting by Women reaches 13th day
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம்கோரி சென்னையில் பெண்கள் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டம் 13வது நாளை எட்டியுள்ள நிலையில் அங்கு 2 வாலிபர்கள் மொட்டையடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பை சேர்ந்த 20 பெண்கள் மதிமுக தலைமை அலுவலகமாக தாயகத்தில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட 5 பெண்களை போலீசார் கைது செய்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், மிச்சமுள்ள 15 பெண்களும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர். இவர்களது போராட்டம் இன்று 13வது நாளை எட்டியது. இந்தப் பெண்கள் மிகவும் சோர்வுடன் காணப்படுகின்றனர். எழக் கூட முடியாமல் படுத்தபடியே உள்ளனர். இவர்களது உடல் நிலையை அவ்வப்போது டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பேராசிரியை சரஸ்வதி, மற்றும் பாண்டிமா தேவி, பழனியம்மாள், லிட்வி மேரி, பிலோமினா, பொன்னுத்தாய் ஆகியோரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரியவந்ததால் ஆம்புலன்சும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தை கைவிடுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரித்துவிட்ட இவர்கள் அவ்வப்போது தண்ணீர் மட்டுமே குடித்து வருகின்றனர்.
இந் நிலையில் சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ராஜ், குமார் ஆகிய வாலிபர்கள் தாயகத்திற்கு வந்தனர். அவர்கள் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், இந்திய அரசை கண்டித்தும் திடீரென்று மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் தலை முடியை கத்திரிக்கோலால் வெட்டி வீசினர்.

போராட்டத்தை கைவிட ஜெ. கோரிக்கை:

இதற்கிடையே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெண்களே முன் நின்று நடத்தும் இந்த உணர்வுப் போராட்டத்தின் வலியை, பெண்ணாகிய நானும் உணர்வேன். என் அன்புச் சகோதரர் மணி உள்பட ஈழத்தமிழர்களுக்காக தங்கள் இன்னுயிரை 14 தமிழர்கள் மாய்த்துக் கொண்டும், கருணாநிதி போர் நிறுத்தத்திற்கு தேவையான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இலங்கைத் தமிழர்களுக்காக உடலை வருத்திக் கொண்டு உண்ணாவிரதம் இருப்பதை தவிர்த்து, பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இதுதான் இப்போதைய முக்கியத் தேவை. எனவே, உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்கள் அனைவரும் தங்களுடைய உண்ணாவிரத அறப்போராட்டத்தை உடனடியாக முடித்துக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+