திருச்செந்தூர் கோவிலில் தங்கமுலாம் பூசும் பணி துவக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தங்கமுலாம் பூசும் பணிகள் நேற்று துவங்கியது.
தமிழ் கடவுள் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக் கோவிலில் வரும் ஜுலை 2ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதனை முன்னிட்டு கோயிலில் 1 கோடியோ 23 லட்சத்து 34 ஆயிரத்தில் பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன.
ராஜகோபுர திருப்பணிகள் ரூ. 14 லட்சம் செலவில் நடந்து வருகிறது. இதில் சிறப்பு அம்சமாக சண்முகர் சன்னதியில் உள்புறத்தில் தங்க ரேக் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 3 கிலோ தங்கத்தில் தங்க முலாம் பூசும் பணி நேற்று துவங்கியது.
இந்த பணிகள் கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், மயிலாடுதுறை துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு), இளம்பரிதி, நகை சரிபார்க்கும் வல்லுனர் ராதாகிருஷ்ணன், உதவி ஆணையர் கிருஷ்ணபாண்டியன், அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி, கோயில் உள்துறை கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணன், முத்து, மேலாளர் மாரிமுத்து, கோயில் தலைமை மணியம் திருக்கைவேல் ஆகியோர் முன்னிலையில் நடந்து வருகிறது.
இன்னும் ஒரு வார காலத்துக்குள் இந்த திருப்பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications