சினிமா மோகத்தில் சீரழிகிறார்கள் தமிழர்கள்-திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம் முத்தமிழ்ச்சங்கம் சார்பில் உலகளாவிய ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அமைப்பதற்கான வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, முத்தமிழ் கலைஞர்களுக்கு விருது வழங்கி பேசினார் திருமாவளவன். அவருக்கு அகம்பன் விருது வழங்கப்பட்டது.
பின்னர் திருமாவளவன் பேசுகையில், தமிழக நாட்டுப்புறக் கலைகள் இன்பெருமையை வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றவை. ஆனால், இன்றைய தமிழர்கள் சினிமா மோகத்தில் சிக்கியுள்ளதால், சினிமா நடிகர்கள் எல்லாம் அரசியல் கனவு காண்கிறார்கள்.
எனவே, தமிழர்கள் சினிமா மோகத்தில் இருந்து விடுபட்டு இனம், மொழி, கலை, உள்ளிட்டவைகளைப் பேணிக் காக்க முன் வர வேண்டும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications