விருக்தி வருடப்பிறப்பு: பழனியில் குவிந்த பக்தர்கள்!
Subscribe to Oneindia Tamil
பழனி: விருக்தி வருடப் பிறப்பை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
வருடப்பிறப்பை ஒட்டி அதிகாலையிலேயே பழனி கோவிலில் சிறப்பு பூஜைகள் தொடங்கின.
அதிகாலையில் ஆனந்த வினாயகர் கோவிலின் முன் தனுர் மாத ஹோமம் நடத்தப்பட்டது.
மூலவர் சன்னதியில் காலை நான்கு மணிக்கே சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன.
பக்தர்கள் வசதிக்காக விஞ்ச் மற்றும் ரோப் கார்களும் அதிகாலையிலேயே இயக்கப்பட்டன.
இரவில் பழனியாண்டவர் தங்க ரத புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications