சீனா: வியக்க வைத்த ஒரு ஆர்ப்பாட்டமும் செய்தியும்!

அப்படியே நடந்தாலும் அதை சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் ஸின்ஹுவா செய்தியாக வெளியிடுவதெல்லாம் மிகப்பெரிய சமாச்சாரம். ஆனால் அத்தனையும் நேற்றும் இன்றும் நடந்துள்ளது.
பெய்ஜிங்கில் உள்ள ஒரு வங்கியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 300 ஊழியர்கள் கூடி, தங்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ள நிவாரணம் போதாது என ஆர்ப்பாட்டம் செய்து கோஷம் எழுப்பினர். அடுத்த சில நிமிடங்களில் பெய்ஜிங் போலீசார் விரைந்து சென்று அனைவரையும் கைது செய்து பஸ்களில் ஏற்றிச் சென்றனர். ஆர்ப்பாட்டம், கைது இரண்டுமே வன்முறை ஏதுமின்றி சுமுகமாக நடந்துவிட்டது.
அடுத்த நாள் இந்தச் செய்தி சீன அரசின் அதிகாரப்பூர்வ ஏஜென்ஸியான் ஸின்ஹுவாவில் இடம்பெற்றுவிட, நம்ப முடியாமல் பார்த்தனர் பெய்ஜிங்வாசிகள்.
சீனாவில் எதற்காகவும் எப்போதும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. அப்படியே நடந்தாலும் அதன் விளைவு எப்படியிருக்கும் என தியானென்மென் சதுக்க நிகழ்வு காட்டிவிட்டதால், யாரும் அதற்கான முயற்சிகளில் இறங்குவதில்லை.
இப்போது நிலைமை மாறிவருகிறதோ என்று கேட்கும் அளவு இந்த வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டமும் அதுகுறித்த செய்தியும் இடம்பெற்றுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இரண்டே முறைதான் பெய்ஜிங்கில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளதாம். அதில் ஒன்று ஈராக் போரைக் கண்டித்து நடந்தது. இன்னொன்று யுனான் மாகாணத்தில் 124 பஸ் டிரைவர்கள் நடத்திய ஸ்ட்ரைக். அதுகூட அரசுக்கு எதிரானது அல்ல. அங்குள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களின் அனைத்து வாகனங்களையும் தனக்கே விற்க வேண்டும் என்று வற்புறுத்தியதால் நடந்ததாம்.












Click it and Unblock the Notifications