மே 28 முதல் மே 30 வரை ஏற்காடு கோடை விழா
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து சேலம் கலெக்டர் சந்திரகுமார் கூறுகையில், ஏழைகளின் ஊட்டி ஏற்காட்டில் கோடைவிழா நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான ஆலோசனைக் கூட்டங்களும் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன.
ஏற்காட்டில் பசுமையை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தாமல், ஒத்துழைப்பு தந்து வருகின்றனர். இந்நிலையில், ஏற்காட்டில் கீழே வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளை அகற்றும் பணியும் நடந்து வருகிறது.
ஏற்காடு கோடைவிழா, இந்த ஆண்டு, வரும் 28 முதல் மே 30ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications