திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நாளை தேரோட்டம்

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 8-வது நாளான நேற்று சுவாமி ஆறுமுக நயினார் பச்சை சாத்தி வீதியுலா வந்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை தேரோட்டம் நடக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் ஆவணித் திருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை சாமி குமாரவிடங்கபெருமான், வள்ளியுடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 8-ம் நாள் திருவிழாவான நேற்று காலை 5.30 மணிக்கு சுவாமி ஆறுமுக நயினார் பெரிய வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார்.

பின்னர் காலை 11 மணிக்கு சாமி பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில் திருக்கோவில் இணை ஆணையர் பாஸ்கரன், அறங்காவலர் சந்திரசேகரன், முதுநிலை கணக்கு அதிகாரி இங்கர்ஷா, கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 10-ம் நாள் திருவிழாவான நாளை காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+