சோழர் கால செப்பேடுகள், செப்புத்திருமேனிகள்-கருணாநிதிக்கு காட்டப்பட்டது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சோழர் காலத்து செப்பேடுகள், செப்புத் திருமேனிகள் முதல்வர் கருணாநிதிக்குக் காட்டப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், இந்தளூர் கழுக்காணி முட்டத்தில் பிற்காலச் சோழர்காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் முன்மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டப்பட்டது.
அப்போது 12 செப்புத் திருமேனிகள், பூசைப் பொருட்கள், வாத்தியக் கருவிகள் சோழர் காலத்தை சார்ந்த செப்பேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியின் பார்வைக்காக வைத்தனர்.
அதை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டு அதுகுறித்து கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications