சுதந்திர தினத்தையொட்டி ஒரு நாள் துறவி வாழ்க்கை வாழும் 1500 ஜெயின் தொழிலதிபர்கள்
ஹைதராபாத்: சுதந்திர தினத்தையொட்டி நாளை ஒரு நாள் துறவு வாழ்க்கை வாழவுள்ளனர் ஜெயின் மதத்தைச் சேர்ந்த 1500 தொழிலதிபர்கள்.
இதுகுறித்து கிரேட்டர் ஹைதராபாத் ஸ்ரீ வர்த்மான் ஸ்தானக்வஸி ஜெயின் ஷிராவக் சங்கத் தலைவர் ராஜேந்திர கிம்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த 1500 தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ஆகஸ்ட் 15ம் தேதி ஒரு நாள் துறவி வாழ்க்கை வாழ்வார்கள்.
துறவி உடை அணிந்து, வாய்களை துணியால் மூடி துறவிகளாக வாழ்வார்கள். மேலும், தெருக்களில் நடக்கும்போது தங்களால் பூச்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் சிறப்புத் துடைப்பத்துடன் செல்வர்.
மேலும், மின்சாரத்தையும் அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். எந்த ஒரு வசதியையும் அவர்கள் பயன்படுத்தவோ, அனுபவிக்கவோ மாட்டார்கள்.
மேலும் நாளைய சாப்பாட்டுக்காக ஜெயின் மதத்தவரின் வீடுகளுக்குப் போய் பிச்சை எடுத்து சாப்பிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த 1500 பேரும் பெரும் கோடீஸ்வரர்கள் என்பதும், சமூ்கத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.