ஸ்ரீவைகுண்டத்தில் நாட்டுப்புறக் கலைகள் குறித்த கருத்தரங்கம்
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் கல்லூரியில் சமயம், வரலாறு, நாட்டுபுற கலைகள், பாண்பாடு பற்றிய 2 நாள் கருத்தரங்கு நடந்தது.
வரலாற்று துறை சார்பாக நடந்த கருத்தரங்கிற்கு முதல்வர் சங்கர நாராயணன் தலைமை வகித்தார். பேராசிரியர் சுப்பிரமணியன் வரவேற்றார். காசி மட இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். சென்னை ராமலிங்க பணி மன்ற செயலாளர் வைத்தியலிங்கம், திருப்பனந்தாள் குமரகுருபர கல்வி நிறுவனங்களில் ஆலோசகர் சுப்பராயலு, மதுரை தொல்பொருள் துறை துணை இயக்குனர் சந்திரவண்ணன் உள்பட பலர் பேசினர்.
கருத்தரங்கின் இரண்டாம் நாள் ராமலிங்க பணிமன்ற செயலாளரா வைத்தியலிங்கம், குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி தமிழ்துறை தலைவர் சுப்புலெட்சுமி, திருப்பனந்தாள் குமரகுருபரசாமி கலை கல்லூரியின் முதல்வர் (ஓய்வு) பசுபதி ஆகியோர் பேசினர். நாட்டுபுற கலைகளின் சிறப்புகளை வலியுறுத்தும் வகையில் ஸ்ரீவைகுண்டம் முத்துராமலிங்கம் குழுவினரின் கனியான்கூத்து, கயிலாச மூர்த்தி குழுவினரின் ஓயிலாட்டமும் நடந்தது.
கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வரலாற்று துறை பேராசிரியரும், கருத்தரங்கின் ஓருங்கிணைப்பாளருமான முனைவர் போஸ் நன்றி கூறினார்.