அரசு அலுவலகங்களில் குண்டு பல்புக்கு தடை: சி.எப்.எல். பல்புகளையே பயன்படுத்த வேண்டும்

Subscribe to Oneindia Tamil

Tungsten Bulb Cfl
சென்னை: மின் சிக்கனத்தை கருத்தில் கொண்டும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் அரசு அலுவலங்களில் குண்டு பல்புகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் பி.டபிள்யு.சி. டேவிதார் வெளியிட்டுள்ள உத்தரவில்,

சாதாரண குன்டு பல்புகளை பயன்படுத்துவதால் 40 வாட்ஸ் அல்லது 60 வாட்ஸ் அளவு மின்சாரம் செலவாகிறது. இவற்றுக்கு பதிலாக சிறு குழல் விளக்குகள் (காம்பேக்ட் புளூரசன்ட் லேம்ப்ஸ்-சி.எப்.எல்') பயன்படுத்தினால் மின்சார செலவு குறையும்.

4 கோடி குண்டு பல்புகளையும் (60 வாட்), 4 கோடி சி.எப்.எல். பல்புகளையும் (14 வாட்) ஒரு மணி நேரத்துக்கு எரியவிட்டால், குண்டு பல்புகள் 2,400 மெகாவாட் மின்சார செலவை ஏற்படுத்துகின்றன.

ஆனால், சி.எப்.எல். பல்புகளோ, வெறும் 560 மெகாவாட் மின்சார செலவை மட்டுமே ஏற்படுத்துகின்றன. இதனால், 1,840 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.

தீவிர பரிசீலனைக்குப் பிறகு, மிகை மின் நுகர்வினை தவிர்ப்பதற்காகவும், மின் சக்தியை சேமிக்கவும் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசுக்கு சொந்தமான உதவிபெறும் கட்டுப்பாட்டில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு, சாதாரண பல்புகளை (குண்டு பல்புகள்) பயன்படுத்துவதற்கு தடைவிதித்து அரசு ஆணையிடுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+