காமராஜர் நினைவிடத்தில் அணையா விளக்கு-ஏற்றி வைத்தார் முதல்வர்

கடந்த 15ம் தேதி நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவின்போது பேசிய முதல்வர் கருணாநிதி, கருணாநிதி நினைவிடத்தில் அணையா விளக்கு அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தார். அதன்படி தற்போது காமராஜர் நினைவிடத்தில் அணையா விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
கிண்டியில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அணையா விளக்கினை முதல்வர் தனது கையால் நேற்று தொடங்கி வைத்து ஏற்றி வைத்தார். காமராஜர் மறைந்தபோது அவரது உடலை இந்த இடத்தில்தான் அடக்கம் செய்தனர். அந்த இடத்தை தேர்வு செய்தவரும் கருணாநிதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது இடம் மிகவும் புதர்கள் அடைந்து கிடந்ததால் அதை சுத்தம் செய்தனர். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியும் அதில் ஈடுபட்டு, வேட்டியை மடித்துக் கட்டி, தலையில் துண்டை தலைப்பாகை போல கட்டிக் கொண்டு சுத்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது காமராஜர் நினைவிடத்தில் கருணாநிதி ஆட்சியிலேயே அணையை விளக்கும் அமைக்கப்பட்டுள்ளது. அதை அவரே ஏற்றிவைத்து காமராஜர் குறித்த நினைவுகளில் மூழ்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, குமரி அனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காமராஜர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணையா விளக்கு ரூ. 18 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications