குற்றாலம் குற்றாலநாதசாமி கோவிலில் கோலாகல கும்பாபிஷேகம்
குற்றாலம் திருக்குற்றாலநாதசாமி கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சைவ சமய பெரியோர்களால் பாடப்பட்ட திருத்தலம் ஆகும். தமிழகத்தில் உள்ள பஞ்ச சபைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சித்திரசபை இங்கு தான் உள்ளது.
சிறப்பு மிக்க இக்கோவிலில் திருப்பணி குழு, அறங்காவலர் குழு, உபயதாரர்கள் அரசின் உதவியுடன் ரூ. 1 கோடி செலவில் திருப்பணிகள் செய்தனர்.
இதையடுத்து இன்று காலை குழல்வாய்மொழி அம்மன் உடனுறை குற்றாலநாதசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இன்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை, நாடி சந்தானத்தை தொடர்ந்து காலை 8 மணிக்கு கடம் எழுந்தருள் நடைபெற்றது. பின்னர் சித்திர சபை விமானம் மற்றும் மூலஸ்தானத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து குற்றாலநாதசாமி மற்றும் குழல்வாய்மொழி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தேறியது.
இன்று மதியம் அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.
அமைச்சர் வரவில்லை:
கும்பாபிஷேகத்திற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தென்காசியிலிருந்து குற்றாலம் வரும் வழி நெடுகிலும் பெருமளவில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டு தடபுடலான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் பெரியகருப்பன் கடைசி வரை வரவே இல்லை.













Click it and Unblock the Notifications