மண்டைக்காடு கோவிலில் அஸ்வதி பொங்கல் விழா: திரளாக வந்த பக்தர்கள்
Subscribe to Oneindia Tamil
குளச்சல்: மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் குமரி மாவட்ட திருக்கோவில்கள் சார்பில் நேற்று அஸ்வதி பொங்கல் விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சுமங்கலிப் பூஜை நடந்தது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களி்ல் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் குமரி மாவட்ட திருக்கோவில்கள் சார்பில் நேற்று அஸ்வதி பொங்கல் விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சுமங்கலிப் பூஜை நடந்தது.
இதி்ல் கலந்துகொள்ள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்தனர். நேற்று மதியம் அஸ்வதி பொங்கல் விழா நடந்தது. கோவில் வாளகத்தில் திரண்டிருந்த சுமார் 4 ஆயிரம் பெண்கள பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இன்று திருவிளக்குப் பூஜை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications