ஜூன் 24ல் குற்றாலம் செண்பகாதேவி கோவில் கும்பாபிஷேகம்
குற்றாலம்: குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட வரசித்த விநாயகர், குற்றால நங்கை அம்மன், மலை மீது அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோவில்களில் இம்மாதம் 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாளை காலை 5 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹை கணபதி ஹோமம், கோ பூஜை, மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, ரஷ்சாபந்தனம், 7 மணி முதல் யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
23-ம் தேதி காலை 8.30 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது.
24-ம் தேதி காலை 5.45க்கு விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, யாத்ராதானம், கும்பம் எழுந்தருளல், 7.30 மணிக்கு மேல் வரசித்த விநாயகர் கோவில் விமான கோபுரம் மற்றும் மூல ஸ்தானத்திற்கு மகா கும்பாபிஷேகம், 7.55 மணிக்கு மேல் குற்றால நங்கை அம்மன் விமான கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், 9 மணிக்கு மேல் செண்பகாதேவி அம்மன் விமான கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.