கிழக்குக் கடற்கரையில் மீன் பிடி தடை – துறைமுகத்தில் ஓய்வெடுக்கும் விசைப்படகுகள்
கன்னியாகுமரி: கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட 45 நாள் தடை உத்தரவு நேற்று முதல் அமுலுக்கு வந்ததை அடுத்து சின்ன மூட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் ஓய்வெடுத்து வருகின்றன.
தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கும் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்தால் மீ்ன் இனம் அடியோடு பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே கடந்த 5 ஆண்டுகளாக ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்கள் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு நேற்று முதல் அமுலுக்கு வந்ததால் சென்னை, தூத்துக்குடி, நாகை, கடலூர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் விசைப்படகுகள் ஓய்வெடுத்து வருகி்ன்றன. சின்னமூட்டம் மீன்பிடி துறைமுகத்தை தாங்குதளமாக கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. இந்த தடை உத்தரவால் மீன் விலை உயரும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications