ரூ. 15 லட்சம் செலவில் மறைமலையடிகள் இல்லம் புதுப்பிப்பு – அரசு அறிவிப்பு
சென்னை: சென்னையில் உள்ள மறைமலையடிகளால் நினைவில்லம் ரூ. 15 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படவுள்ளது. சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இதை அறிவித்தார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் வாழ்ந்து மறைந்த இல்லம், காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரத்தில் அமைந்துள்ளது. அந்த இல்லம் மறைமலையடிகளார் நினைவு இல்லமாக இப்போது தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பில் உள்ளது.
இந்தக் கட்டடம் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது எனவும், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அந்த இல்லத்தைப் பழுது பார்க்க, தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்துக்கு ரூ.15 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
இந்தத் தொகை பொதுப்பணித் துறைக்கு அளிக்கப்படும். இந்தத் தொகை மூலம் நினைவு இல்லம் பழுது பார்க்கப்பட்டு, சீரமைத்து தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications