சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - களைகட்டும் பத்மனாபபுரம் அரண்மனை

கேரள மாநில அரசி்ன் தொல்பொருள் ஆய்வு துறையி்ன் கட்டுபாட்டில் உள்ள பத்மனாபபுரம் அரண்மனை குமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா இடமாக சிறப்பு பெற்றுள்ளது. இதனை பார்த்து ரசிப்பதற்கு வெளிநாடு, வெளிமாநிலம், உள்ளூர் சுற்றுலா பயணிகள் தினமும் வருகை தருகின்றனர்.
தற்போது வரத் துவங்கியுள்ள கேரள சுற்றுலா பயணிகளால் பத்மனாபபுரம் அரண்மனை களை கட்டியுள்ளது. மூன்றரை ஏக்கர் பரப்பளவில் 27 கட்டிடங்களை இணைத்து கம்பீரமாக கட்டப்பட்டுள்ள அரண்மனையின் உள் அழகு அனைத்தும் கலை நயத்துடன் மரத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.
கண்டு ரசித்த பின்பும் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணம் அதன் ஓவ்வொரு பாகங்களும், அமைக்கப்பட்டுள்ளது,. பூமுகம், ஊட்டுபுரை, உப்பரிகை மாளிகை, என ஒவ்வொரு கட்டிடத்திலும் விலை உயர்ந்த மரத்திலான மேற்கூரையின் அடிப்பகுதியில் சித்திர வேலைபாடுகளினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெளியில் எத்தனை டிகிரி வெயில் இருந்தாலும் அரண்மனையின் உள்பகுதியில் எப்போதும் குளிர்ச்சியாகவே காணப்படும். இதன் தரை பகுதியானது சுமார் 450 வருடங்களுக்கு முன்பாக எப்படி இருந்ததோ அதேபோன்று குளிர்ச்சி தன்மை மாறாமல் இப்போதும் கால்பட்டவுடன் ஜில்லென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications