ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – பங்கேற்கிறார் கலாம்
மதுரை: மதுரையில் மே 20ம் தேதி நடைபெறவுள்ள ராமகிருஷ்ணர் – விவேகானந்தர் பக்தர்கள் மாநாட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்கலந்து கொள்ளவுள்ளார்.
மதுரையில் உள்ள ராமகிருஷ்ண மடம் இந்த மாநாட்டை நடத்தவுள்ளது. இதுகுறித்து மட தலைவர் கமலாத்மானந்தர் கூறுகையில்,
ராமகிருஷ்ணர் - விவேகானந்தர் பக்தர்களின் 18 வது மாநாடு டிச., 3 முதல் 5 வரை மதுரை சவுராஷ்டிரா மேல்நிலை பள்ளியில் நடக்கிறது. அகில உலக ராமகிருஷ்ண மடம்- ராமகிருஷ்ண மிஷன் துணைத் தலைவர் ஸ்மரணானந்தஜி, கவுதமானந்தஜி மற்றும் துறவிகள் பங்கேற்கின்றனர்.
இசைக் கச்சேரி, கலை நிகழ்ச்சி, சொற்பொழிவு, ஹோமம் நடைபெறும். மாநாட்டு புரவலர்கள் சென்னை ராமகிருஷ்ண மடம் தலைவர் கவுதமானந்தர், ராமகிருஷ்ண தபோவனம் தலைவர் சதானந்தர், ராம்கோ குரூப் தலைவர் ராமசுப்பிரமணியராஜா, தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கருமுத்து கண்ணன் மற்றும் தலைவர், உதவித் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநாட்டின் அறிமுக விழா மே 20 பகல் 11.30 முதல் 1.30 மணிவரை மதுரை ராமகிருஷ்ண மடத்தில் நடக்கிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் சிறப்பு சொற்பொழிவு, கலந்துரையாடல் இடம்பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications