பிபிஓ-மீடியாக்களில் பணியாற்றும் பெண்களிடையே புகை பிடித்தல் அதிகரிப்பு

உலக புகையிழை எதிர்ப்பு தினம் வரும் 31ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பையில் நடத்தப்பட்ட இரு சர்வேக்களில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.
அதில் தெரியவந்துள்ளதாவது:
பிபிஓ, கால்சென்டர்களில் பணியாற்றும் பெண்கள் பணிச் சுமை, போட்டி, அதிகமான ஊதியத்தால் கிடைத்துள்ள சுதந்திரத்தால் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி வருகி்ன்றனர்.
ஆங்கில தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் உள்ளிட்ட மீடியாக்கள், பொழுதுபோக்கு தொலைககாட்சி சேனல்களி்ல் பணியாற்றும் பெண்களில் 5 முதல் 35 சதவீதம் வரை நாளொன்றுக்கு 4 முதல் 10 சிகெரெட்களை புகைக்கி்ன்றனர். இதில் சிலர் செயின் ஸ்மோக்கர்கள் ஆவர்.
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள், ஹாஸ்டல்களி்ல் தனியே தங்கியிருப்போர், பேயிங் கெஸ்ட் ஆகிவற்றில் தங்கியிருக்கும் பெண்களில் 15 முதல் 20 பேர் பசியைப் போக்கவோ அல்லது டயட்டிங் காரணமாகவே புகை பிடிக்கின்றனர். இவர்கள் காசநோய்க்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம்.
பி.பி.ஓ. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களில் பலர் ஹூக்கா பார்களுக்கு சென்று புகைப்பதன் மூலம் பணிச் சுமையிலிருந்து தப்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications