களக்காடு தலையணையில் காணும் பொங்கல் கொண்டாட கடும் கட்டுப்பாடுகள்
களக்காடு: களக்காடு தலையணையில் காணும் பொங்கல் கொண்டாட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக புலிகள் காப்பாக இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
களக்காடு தலையணையி்ல் வரும் 16-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து களக்காடு புலிகள் காப்பாக இணை இயக்குனர் சத்தியநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
வனப்பகுதியில் அமைதி, ஒழுக்கம் காக்க வேண்டும். விலங்குகளை விரட்டவோ, துன்புறுத்தவோ கூடாது. சத்தம் எழுப்பும் கருவிகளை கொண்டு வரக் கூடாது. மது பாட்டில்கள், வெடி பொருட்கள், ராசாயனப் பொருட்கள், தீப்பெட்டிகள், பிளாஸ்டிக் பைகள் கொண்டு வரக் கூடாது. வனப்பகுதியில் சமையல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் நபர் ஒருவருக்கு ரூ.15, கேமராவுக்கு ரூ.25, வீடியோ கேமராவுக்கு ரூ.150, மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.5, கார்களுக்கு ரூ.15, சிறுவர்களுக்கு ரூ.2 என நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும். விதிகளை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வனத்துறையினரும், போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். பச்சையாற்று பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலையணை நுழைவு கேட் அருகே சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருகிறார்களா என்பதை கண்டறிய சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications