ஆதரவற்ற தமிழக குழந்தைகளுக்கு உதவுங்கள்: துபாய் தமிழ்த்துளி அமைப்பு
துபாய்: துபாய் தமிழ்த்துளி அமைப்பு அமீரகத்தில் வாழ்ந்து வரும் தமிழ்க் குடும்பத்தினரிடம் இருந்து எழுது பொருட்களை சேகரித்து தமிழ்நாட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்து உதவ திட்டமிட்டுள்ளது.
துபாய் தமிழ்த்துளி அமைப்பு அமீரகத்தில் தமிழ்க் குழந்தைகள் தமிழில் பேச வேண்டும் எனும் நோக்கத்துடன் பேச்சாற்றல் பயிற்சிகளை வழங்கியும், தனித்திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அமீரகத்தில் வாழ்ந்து வரும் தமிழ்க் குடும்பத்தினரிடம் இருந்து எழுது பொருட்களை சேகரித்து தமிழ்நாட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு தந்து உதவும் முயற்சியை தமிழ்த்துளி அமைப்பு மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்திற்கு உதவிட விரும்புவோர் தங்களிடம் உள்ள எழுதுபொருட்களை அல்லது புதிய எழுது பொருட்களை, அதாவது பேனா, பென்சில் மற்றும் ரப்பர் போன்றவற்றை வழங்கி உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள்:
+971 55 4093773 / +971 50 8560670 / +971 55 5571985
குறிப்பு:
எழுது பொருட்களை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் சேர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications