23-ல் துபாயில் இலவச சட்ட உதவி முகாம்: வழக்கறிஞர் நந்தகுமார் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் இலவச சட்ட உதவி முகாம் வரும் 23-ம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற இருக்கிறது.
கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி. நந்தகுமார் இந்த சட்ட உதவி முகாமில் பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்றம், கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கறிஞர் அலுவலகங்களைச் செயல்படுத்தி வருபவர் வி. நந்தகுமார்.
அமீரக வாழ் தமிழ் மக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இலவச சட்ட உதவி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அபுதாபியில் இலவச சட்ட உதவி பெற விரும்புபவர்களும் தொடர்பு கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் 050 1321722 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.












Click it and Unblock the Notifications