காதலும் கனவுகளும்…..

தாமரை இலைகளில்
தைத்த மெத்தை
தடாகத்தின் நடுவே போட்டிருக்க
நாம் இருவர் மட்டும்
தனிமையில் அமர்ந்து
பேசிக் களித்திருப்போம்...
சத்தமில்லாத முத்தத்தை
நீ கேட்க
தண்ணீருக்குத் தெரியாமல்
எப்படி தருவது
என்று நான் தடுமாற
நமக்குள் அங்கே
பொய்யாய் ஒரு போராட்டம்...
நள்ளிரவு தண்டியும்
நடக்கிறது சண்டை….
மடியில் தலைவைத்து
படுத்துக் கொண்டே
வானில் இருக்கும்
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருக்கிறாய்…
அன்று அமாவாசையாம்
யார் சொன்னது?
அதுதான் முழுச்சந்திரன்
என் மடியில் கிடக்கிறதே!
மயக்கத்தில் கிடக்கும் போதும்
மழை பற்றிய பேச்சு வருகிறது
அழைத்தீர்களா என்ன?
என்றபடியே வந்து
தூறல் போடுகிறது வானம்…
விடிய விடிய மழையில்
நனைந்து கொண்டே
நடுக்கத்தில் கிடக்கிறோம் நாம்…
அதிகாலை வரை தொடர்கிறது மழை….
ஆளில்லா கானகத்தில்
பறவையின் கூடு தேடி
புலம் பெயர்கிறோம்….
எத்தனை நாள் இப்படியே இருப்பது?
உன் மார்பில் சாய்ந்தவாரே
நான் கேட்க
திடுக்கிட்டு கண் விழிக்கிறாய் நீ
நம் இருவருக்குமே
ஒரே கனவு
இதில் கூட என்ன ஒரு ஒற்றுமை.












Click it and Unblock the Notifications