டிச.10ல் சந்திர கிரகணம்: சபரிமலை கோவில் நடை அடைப்பு
திருவனந்தபுரம்: சந்திர கிரகணத்தை ஒட்டி டிசம்பர் 10 ம் தேதி இரவு மூன்று மணி நேரம் சபரிமலை ஐயப்பசுவாமி கோவிலின் நடை அடைக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.
சபரி்மலையில் கடந்த 17ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நாள் முதல் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். தற்போது பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்து விட்டு திரும்புகின்றனர்.
இந்த நிலையில் வருகிற 10ம் தேதி சந்திர கிரகணம் வருவதை ஓட்டி மாலை 6.15 முதல் இரவு 8.15 மணி வரை நடை அடைக்கப்படும் என்றும் தீபாராதனை உள்பட எந்த பூஜையும் நடைபெறாது என்றும் தேவசம் போர்டு நிர்வாகம் அறிவித்து உள்ளது. நடை அடைக்கப்படும் நேரத்துக்கு முன்னதாக பூஜைகள் நடத்துவது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications