திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி்த்திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதில் விநாயகர் தேர் காலை 6.10 மணிக்கு இழுக்கப்பட்டது. இந்த தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து 6.40க்கு நிலையை அடைந்தது.
இதைத் தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வானையுடன எழுந்தருளிய தேர் காலை 6.50 மணிக்கு இழுக்கப்பட்டு வெளி வீதி நான்கிலும் தேர் வலம் வந்து 7. 40 மணிக்கு நிலையை அடைந்தது. வள்ளியம்மாள் தேர் 7.50 மணிக்கு புறப்பட்டு நான்கு வீதிகளிலும் பவனி வந்து 8.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
தேரோட்ட நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பாஸ்கரன், உதவி ஆணையர் செல்லத்துரை, அலுவலக உதவி கண்காணிப்பாளர் செல்வகுமாரி, திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் வி.எம். மகேந்திரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.












Click it and Unblock the Notifications